Skip to main content

Northern Provincial Council

புழுதியாற்று ஏற்று நீர்பாசனத் திட்டம் கௌரவ ஆளுநரால் மீள ஆரம்பித்து வைக்கப்பட்டது.

வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களால் புழுதியாற்று ஏற்று நீர்பாசனத் திட்டம் இன்று வெள்ளிக்கிழமை (26.09.2025) மீளவும் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

தற்போதைய நிலையில் கால் ஏக்கர் வீதம் 30 விவசாயிகள் பயிர்ச்செய்கை செய்ய முடியும் எனவும் எதிர்காலத்தில் விவசாயிகள் முயற்சிகளைப் பொறுத்து இதனை இன்னமும் விரிவாக்க முடியும் என்றும் ஆளுநர் இதன்போது குறிப்பிட்டார். இதனைத் தொடர்ந்து புழுதியாற்று ஏற்று நீர்பாசனத் திட்டத்தில் பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்படவுள்ள காணிகளையும் ஆளுநர் பார்வையிட்டார்.

விவசாயிகளின் கோரிக்கைக்கு அமைவாக, மாகாண குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி நன்கொடை நிதியில், வடக்கு மாகாண நீர்பாசனத் திணைக்களத்தால் 12 மில்லியன் ரூபா செலவில் சூரிய மின்கலம் மூலமும் இயங்கும் வகையில் புழுதியாற்று ஏற்று நீர்பாசனத் திட்டம் திருத்தியமைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.