Skip to main content

Northern Provincial Council

வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் அவர்களின் சுதந்திர தின வாழ்த்துச் செய்தி._

இலங்கையின் 77ஆவது சுதந்திர தினத்தில், அனைத்து இலங்கையர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

சுதந்திரம் என்பது கடந்த காலத்தை நினைவுகூரும் ஒரு நிகழ்வாக மட்டுமல்லாமல், ஒற்றுமை, அமைதி மற்றும் செழிப்பில் வேரூன்றிய எதிர்காலத்தை உருவாக்குவதற்கான ஒரு உறுதிப்பாடாகும்.

நாட்டின் வரலாற்றிலும் அதன் எதிர்காலத்திலும் வடக்கு மாகாணம் ஒரு குறிப்பிடத்தக்க இடத்தைப் பிடித்துள்ளது. வடக்கின் ஒவ்வொரு குடிமகனதும் வாழ்க்கையை முன்னேற்றுவது மற்றும் கண்ணியத்தை உறுதி செய்யும் வாய்ப்புகளை உருவாக்குவது எமது கூட்டுப் பொறுப்பாகும்.