Skip to main content

Northern Provincial Council

வடக்கு மாகாண டெங்கு களத்தடுப்பு உதவியாளர்கள் கௌரவ ஆளுநரை சந்தித்துக் கலந்துரையாடினர்.

வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களை, வடக்கு மாகாண டெங்கு களத்தடுப்பு உதவியாளர்கள் நேற்று திங்கட்கிழமை (27.01.2025) ஆளுநர் செயலகத்தில் சந்தித்துக் கலந்துரையாடினர்.

2017ஆம் ஆண்டிலிருந்து இன்றுவரை தற்காலிகமாக பணியாற்றி வருவதாகவும், மாதாந்த வேதனமாக 22,000 ரூபா மட்டுமே வழங்கப்படுவதாகவும், தமக்கு நிரந்தர நியமனம் வழங்குமாறு கோரியும் ஆளுநரிடம் மனு ஒன்றையும் சமர்ப்பித்தனர். இது தொடர்பில் சம்பந்தப்பட்ட தரப்புக்களுடன் கலந்துரையாடுவதாக வடக்கு மாகாண ஆளுநர் தெரிவித்தார்.